வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தரைக் கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டபோது தலைமறைவாகியிருந்த இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 19ஆம் திகதி பருத்தித்துறையில் 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையில் இருந்து சென்ற பொலிஸார் அவர்கள் இருவரையும் இன்று அங்கிருந்து அழைத்துவந்து பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
இதன் போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்